கல்பொத்தேகம வித்தியாலயத்தின் பிள்ளைகளின் கல்விக்கான முதலீடு

அநுராதபுரம் மாவட்டத்தின் கல்பொத்தேகம வித்தியாலயத்திடமிருந்து பெறப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, 2022 ஆம் கல்வியாண்டிற்கான முழுமையான புத்தகங்களை வழங்குவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதற்காக பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள சிறுவர்களுக்காக இந்த கருத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தின் குறைந்த வருமான நிலை காரணமாக, இந்த பின்தங்கிய குழந்தைகள் தங்கள் கல்வித் தேவைகளைப் பெறுவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.


இக்குழந்தைகளை ஊக்குவித்து, பெரிய காரியங்களைச் சாதிக்க உதவுவதே எங்கள் முயற்சியாகும்.


இந்த திட்டம் 2022 ஏப்ரல் 22 அன்று பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கொடையாளர்களின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது.

எம்மோடு இணைந்து தன்னார்வத்தொண்டாற்றுங்கள்

எங்கள் பங்காளர் ஆகுங்கள்