எங்களிடமிருந்து, அவர்களுக்கு

மக்கள் சக்தி (Gammadda) - ''கிராமத்தின் இதயம்'' என்று பொருள்படும். இது அரசியல், பொருளாதார, மத மற்றும் கலாசார ரீதியான பாகுபாடுகளின்றி உண்மையான தேவைகளோடு இருப்பவர்களைக் கண்டறியும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதொரு முயற்சியாகும். தொடர்ந்து பல வருடங்களாக வெவ்வேறு அரசாங்கங்களினால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைக் கண்ணுற்ற News 1st 'மக்கள் சக்தி' என்ற திட்டத்தைத் தொடங்கியது. இது தற்போது வார்த்தையாக மட்டுப்படாமல், நாட்டு மக்களின் ஒருமித்த நம்பிக்கையாக மாறியுள்ளது. முற்றுமுழுதான இலங்கை வரலாற்றில் மக்கள் சக்தி ஒன்றே நடைமுறையிலிருக்கும் மிகப்பெரிய மனிதாபிமான செயற்றிட்டம்.

நோக்கு

மக்கள் சக்தி 'இணைப்பு' என்னும் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டதோர் அமைப்பாகும். மறக்கப்பட்டவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, அவர்களுக்கு சீரானதோர் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை அமைத்துக்கொடுக்க முடியும் என நாம் நம்புகிறோம்.

மேலும் தெரிந்துகொள்ள